புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 பிப்., 2013


ஜனாதிபதி ஒபாமா அவர்களிடம் தமிழர்களின் எதிர்காலம் பற்றி சந்தித்து பேசுவதற்கு தமிழர்களுக்கான ஒபாமா அமைப்பானது வெள்ளைமாளிகையிடம் கேட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக பல வழிகளில் இனப்படுகொலைகளை செய்தது என்பதை தமிழர்களுக்கான ஒபாமா அமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.


இது குறித்து தமிழர்களுக்கான ஒபாமா அமைப்பு தெரிவிக்கையில்,
2008ம் ஆண்டு ஒபாமா அவர்கள் ஜனாதிபதி வேட்பாளராக இருந்த போது, அமெரிக்கா இனி உலகில் இனப்படுகொலையை தடுப்பதைத் தவிர வேறு எந்த வெளிநாட்டு மோதல்களிலும் ஈடுபடப்போவதில்லை என்று கூறினார். நாங்கள் அவருக்கு இனப்படுகொலை தொடந்தும் வடகிழக்கில் நடைபெறுவதாக கூறினோம்.
நாங்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழர்களுக்கு ஜனாதிபதி ஒபாமாவிடமிருந்து உதவிகள் கிடைக்குமென்று காத்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால் தற்போது வரை எதுவும் கிடைக்கவில்லை. நாம் தற்போது கூட அவரிடம் இருந்து உதவி கிடைக்கும் என்று காத்துக்கொடிருக்கின்றோம்.
இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக செய்யும் ஒவ்வொரு செய்கைகளும் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் வரையறுக்கப்பட்ட இனப்படுகொலையின் அம்சங்களை கொண்டிருப்பதாகவே உள்ளது. இது தமிழர்களின் நிலைமையின் தீவிரத்தை ஒபாமா அவர்களுக்க உணத்தியிருக்கும் என்று நம்புகின்றோம்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் இன்படுகொலைகளை பின்வருமாறு பட்டியல் இட்டு கூறியுள்ளோம்.
1. இலங்கை அரசு தமிழர்களை அவர்களின் பூர்வீக இடங்களை விட்டு வெளியேற்றி வருகின்றது.
2. ஐக்கிய நாடுகள் அமைப்பினால் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை, வேண்டுமென்றே போரின் போது தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு பாவித்து பல ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்து இனப்படுகொலை செய்துள்ளது.
3. 90 ஆயிரம் பெண்களை விதவைகள் ஆக்கியதோடு அவர்களை இலங்கை இராணுவத்தினர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி அவர்களின் எதிர்காலத்தை சிதைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இதுவும் ஐக்கிய நாடுகளினால் வரையறுக்கப்பட்ட இனவழிப்பின் அம்சமேயாகும்.
4. இளம் தமிழ் பெண்களை தென் பகுதிக்கு கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடவைத்து, அடிமைப்படுத்திவைத்து அவர்களின் எதிர்காலத்தை சிதைப்பதோடு புதிய தமிழச் சமுதாயம் உருவாகாமலும் தடுக்கப்படுகின்றனர். இதுவும் ஐக்கிய நாடுகளினால் வரையறுக்கப்பட்ட இனவழிப்பின் அம்சமேயாகும்.

ஜனாதிபதி ஒபாமா அவர்கள்  தமிழ் மக்கள், அவர்களது பூர்வீகமான நிலங்களில் அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தருவதற்கு உதவி செய்து தருவார் என்று நம்பிகையுடன் இருக்கின்றோம். இவ்வாறு தமிழர்களுக்கான ஒபாமா அமைப்பு தெரிவித்துள்ளது.

ad

ad