புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜன., 2013


சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிஸானா நபீக்கின் மூதூர் வீட்டிற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் தலைமையில் அமைச்சர்கள் குழுவொன்று விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பணிப்புரைக்கமைய இந்தக்குழு இன்று மாலை 3.00 மணிக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரியவருகிறது.

இக்குழுவில்,அமைச்சர்களான ஜோன் செனவிரட்ண, பந்துல குணவர்தன, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, அனுர பிரியதர்ஷன யாப்பா, சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம, பிரதி அமைச்சர் விஜய முனிசொய்ஸா, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் ஆகியோர் அடங்குகின்றனர்.
ரிசானாவின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கும் இக்குழுவினர், அவர்களது அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், அக்குடும்பத்திற்கு ஜனாதிபதி நிதியிலிருந்து நிரந்த வீடொன்றை அமைப்பதற்கான அடிக்கல்லையும் நாட்டி வைக்கவுள்ளதாக முதலமைச்சரின் ஆலோசகர் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் முகம்மது ஸகீது தெரிவித்துள்ளார்

ad

ad