புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜன., 2013



தடுப்பில் உள்ள மாணவர்களை கைவிட்டது யாழ்.பல்கலை! கலைப்பீடத்தை இம் மாதம் ஆரம்பிக்க தீர்மானம்!


யாழ். பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பாக நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலைப்பீடத்தை இம்மாத நடுப்பகுதியில் ஆரம்பிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. நேற்றுக் காலை கலைப் பீடத்தை
மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.



இக் கலந்துரையாடலியே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவினை பல்கலைக்கழகத்தின் மூதவையினருக்கு அவர்களது முடிவுக்கமைய இப் பீடத்தினை ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மாணவர்களில் நால்வர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இப்பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad