புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜன., 2013


கெமரூனில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்படும் இளம் பெண்கள்!பெண்களின் பாலுறுப்புகள், கண்கள், மார்பங்கள் ஆகியன வெட்டி எடுக்கப்பட்டுள்ளன.

கெமரூன் நாட்டில் மர்மமான முறையில் இளம் பெண்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அந்நாட்டின் தலைநகரான யவுண்டேவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 வாரங்களில் மாத்திரம் சுமார் 18 இளம் பெண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் கொலைசெய்யப்பட்டுள்ள பெண்களின் வயது 18 இற்கும் 25 க்கும் இடைப்பட்டதென தெரிவிக்கப்படுகின்றது.
இதுமட்டுமன்றி பெண்களின் பாலுறுப்புகள், கண்கள், மார்பங்கள் ஆகியன வெட்டி எடுக்கப்பட்டுள்ளன.
மாந்ரீக நடவடிக்கைகளில் நம்பிக்கையுள்ளோரே இப் பாதகச் செயலில் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.

இத்தகைய கொலைகள் 1970 ஆம் ஆண்டுக்கு முன்னர் அங்கு தொடர்ச்சியாக இடம்பெற்று வந்ததாகவும் பின்னர் அவை குறைந்திருந்ததாகவும் ஆனால் தற்போது மீண்டும் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் தலைநகரில் பெண்களில் இரவு நேரங்களில் தனிமையில் செல்வதை தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கொலையாளிகளை கூடிய விரைவில் கைது செய்யும்படி பொதுமக்கள் அந்நாட்டு ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளனர்
.

ad

ad