புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2013


மகிந்தவுடன் கைகோர்த்துள்ள முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா
இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசரும், தமிழின விரோதியும், இதுவரை மகிந்த ராஜபக்சவுடன் கடுமையான முரண்பாட்டைக் கொண்டிருந்தவருமான சரத் என். சில்வாவை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்குள் உள்வாங்கி அவருக்கு நீதியமைச்சுப்
பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக அரச சார்பு சிங்கள இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச  மற்றும் அவரது அரசுடனும் முரண்பட்ட நிலையில் காணப்பட்ட இவர், அண்மையில் பதவி நீக்கஞ் செய்யப்பட்ட பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.
அவரது பதவி நீக்கத்தை நியாயப்படுத்தியதுடன் நீதிமன்றத்தை விட பாராளுமன்றத்துக்கே அதிகாரங்கள் உள்ளன என்றும் கூறியிருந்தார்.
இதனையடுத்தே அவருக்கான வெகுமதியாக மகிந்த அரசு எம். பி பதவியையும் அமைச்சுப் பொறுப்பையும் வழங்கவுள்ளது.
அத்துடன் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவை அமர்வில்  இலங்கை அரச தரப்புக்கு சரத் என். சில்வாவே தலைமை தாங்கவுள்ளார் என்றும் அந்த சிங்கள இணையம் மேலும் தெரிவித்துள்ளது.

ad

ad