புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜன., 2013


கவர்ச்சி அழகியான பிரபல மேடை நடிகை ஒருவர் கடந்த புதுவருட தின இரவில் கொழும்பின் புற நகரத்தில் நான்கு பேர் கொண்ட குழுவால் கூட்டாக கற்பழிக்கப்பட்டு உள்ளார்.
இவர் திருமணம் ஆனவர். ஒரு வயது குழந்தையின் தாய். மேடை நாடகங்கள் பலவற்றிலும் முக்கிய பாத்திரங்களில் நடித்தவர்.

இவர் நீர்கொழும்பில் கதிரன பிளேஸில் வைத்து கூட்டுக் கற்பழிப்பு நடந்து உள்ளது. சன நடமாட்டம் அற்ற நேரம். இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். தனியாக ஒழுங்கை ஒன்றால் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இவரை ஒரு நபர் வலுக் கட்டாயமாக நிறுத்தினார். இவரது வாயை இறுகப் பொத்தினார். காடு போன்ற இடத்துக்கு இழுத்துச் சென்றார். இவரை கற்பழித்தார்.
இதனிடையில் தொலைபேசி மூலம் மூவருக்கு அழைப்புக் கொடுத்தார். வந்த மூவரும் இவரை வல்லுறவு கொண்டனர்
இம்மூவரில் ஒருவரின் குரல் இவருக்கு மிகவும் பரிச்சயமானது. இவர் தங்கி இருக்கின்ற விடுதியின் உரிமையாளரின் குரல் அது.
கற்பழித்து விட்டு நால்வரும் சென்றனர். இவர் காயங்கள், வேதனை காரணமாக ஓலம் இட்டு அழுதார். அயலவர்கள் திரண்டு வந்தனர். இவரை வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அயலவர்களின் முறைப்பாட்டின் பேரில் சம்பவத்தை விசாரிக்க பொலிஸார் இவரிடம் வந்தனர். இவர் விடுதி உரிமையாளரை காட்டிக் கொடுத்தார்.
விடுதி உரிமையாளரை வைத்து ஏனைய குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டார்கள்.
விடுதி உரிமையாளரின் பெயர் பற்றிக் ஃபெர்னாண்டோ. வயது 54. ஏனையோரில் இருவர் விமானப் படை உத்தியோகத்தர்கள். நான்காவது நபர் ஒரு தச்சுத் தொழிலாளி. பெயர் புத்திக்க பிரேமரட்ண. வயது 32.
இந்நால்வரும் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 15 ஆம் திகதி விளக்கமறியலில் போடப்பட்டு உள்ளார்கள்.
டில்லியில் கடந்த வாரம் இடம்பெற்ற மருத்துவ மாணவி கூட்டுக் கற்பழிப்பைப் போலவே இக்கற்பழிப்பும் மிக கொடூரமானது என ஊடகங்கள் எழுதி உள்ளன.

ad

ad