புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 பிப்., 2013


இந்திய வீட்டுத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள சதி குறித்து துணைத் தூதரிடம் சரவணபவன் எம்.பி மகஜர்
வடக்கில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கென இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வழங்கப்படும் வீட்டுத் திட்டத்தில் தமிழர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதனை நிறுத்தக்கோரி, மீளக்குடியமர்ந்தோர்
நலன்பேணும் அமைப்பினால் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் ஊடாக இந்தியத்துணைத் தூதருக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
மீளக்குடியமர்ந்தோருக்கான இந்திய வீட்டுத்திட்டத்தில் தமிழர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக வவுனியாவில் உள்ள மீளக்குடியமர்ந்தோர் நலன்பேணும் அமைப்பு நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டது.
ஆர்ப்பாட்டத்தினை அடுத்து அந்த அமைப்பினால் வழங்கப்பட்ட மகஜரை பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நேற்று மாலை யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதர் வி.மகாலிங்கத்திடம் கையளித்தார்.

ad

ad