புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2013


ஆஸ்திரேலிய ஓபன் முதல் சுற்றில் செரீனா வெற்றி: காயமடைந்ததால் அடுத்த சுற்றில் ஆடுவது சந்தேகம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ், முதல் சுற்றில் ருமேனியாவின் எடினா காலோவிட்ஸ்- ஹால் என்பவருடன் மோதினார். ஆக்ரோஷமாக ஆடிய செரீனா எடினாவை ஒரு புள்ளிகூட எடுக்க விடாமல் திணறடித்தார்.
 
அப்போது வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு வலியுடன் தொடர்ந்து ஆடிய அவர் 6-0, 6-0 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று, ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
 
அவரது காலில் வலி மற்றும் வீக்கம் இருப்பதால் எக்ஸ்ரே எடுக்கப்பட உள்ளது. ஆனாலும் அடுத்த சுற்றில் தன்னால் சிறப்பாக ஆட முடியும் என்ற நம்பிக்யைல் செரீனா இருக்கிறார். அச்சுறுத்தும் அளவுக்கு ஏதாவது காயம் இருந்தால் போட்டியில் பங்கேற்காமல் இருப்பதைத் தவிர வேறு வழியில்லை. அதேசமயம் நான் நன்றாக இருப்பதாகவே உணர்கிறேன் என்று செரீனா கூறினார்.
 
முன்னதாக நடந்த ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, நெதர்லாந்தின் ராபின் ஹாசை 6-3, 6-1, 6-3, என்ற செட்கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ad

ad