புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜன., 2013


பதவி விலகத் தயாரில்லை! பொலிஸ் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பிரதம நீதியரசர் ஷிராணி கோரிக்கை
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா, தனது பதவி விலகல் கடிதம் கிடைக்கப் பெற்ற போதும், அப்பதவியிலிருந்து விலகுவதற்குத் தயாரில்லை என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி ஷிராணி பண்டாரநாயக்காவே தற்போதும் பிரதம நீதியரசர் என்ற வகையில் அவர் தனக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சட்ட ரீதியாக பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தன் மீதான குற்றப் பிரேரணை மற்றும் பதவி நீக்கம் செய்யப்பட்டமை சட்டவிரோதமானது என சர்வதேச ரீதியாக கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் அவர் பதவி விலகலை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, எதிர்வரும் வாரத்தில் ஷிராணி பண்டாரநாயக்க நீதியரசர் குழுத் தலைவராக வழக்கு விசாரணைகளின் போது சமூகமளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி எதிர்வரும் 15 மற்றும் 17ஆம் திகதிகளில் இடம்பெறும் வழக்கு விசாரணைகளில் சமூகமளிக்கவுள்ளதாக பதியப்பட்டுள்ளது.

ad

ad