புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜன., 2013


நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் சட்டமல்ல என்பதுடன் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு எந்தவிதமான சட்ட அதிகாரங்களும் இல்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
நிலையியற் கட்டளை 78(ஏ) ஒரு சட்டமல்ல ஆதலால் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு ஒரு நீதிபதியை குற்றவாளி என தீர்மானிக்கும் சட்ட அதிகாரமோ அல்லது வலுவோ இல்லை என்ற  உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.


அரசியலமைப்பு தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்தது. அதிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் ரீட் மனுவை ஜனவரி 15ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்த ரீட் மனு இன்று வியாழக்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்கண்டவாறு ஒத்திவைத்தது.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகர் ஆகியோரை நீதின்மன்றத்தில் இன்று ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் 2012ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 21ஆம் திகதி அறிவிப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவுக்கு எதிராக இடையீட்டு மனுவொன்று நேற்று புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசரின் ரீட் மனுவை செல்லுப்படியற்றதாக்க வேண்டும் என கோரியே இந்த இடை

ad

ad