புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2013


சுன்னாகம் நலன்புரிமுகாமில் 15 வயது சிறுமி துஸ்பிரயோகம்!- இரு இளைஞர்கள் தலைமறைவு
சுன்னாகம் பிரதேசத்தில் அமைந்துள்ள நலன்புரி முகாமில் வசித்து வந்த 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை குறித்த சிறுமி தனிமையில் இருந்த போது, இரு இளைஞர்கள் முகாமில் அத்துமீறி நுழைந்து, சிறுமியை பலாத்காரம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதே நலன்புரி முகாமைச்சேர்ந்த இரு இளைஞர்களே இவ்வாறு குறித்த சிறுமியை துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். எனினும் குறித்த இளைஞர்கள் இருவரும் தலைமறைவாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ad

ad