புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2013


முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிடக் கூடாது: தண்டனையை உறுதி செய்த முன்னாள் நீதிபதி

ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 21.5.1991 அன்று நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.


இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் முருகன், சாந்தன், பேரறிவாளன், மற்றும் முருகனின் மனைவி நளினி ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
நளினி தரப்பில் முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு அனுப்பப்பட்ட கருணை மனுவை பரிசீலித்த பிறகு நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
மரண தண்டனையை எதிர்நோக்கி வேலூர் சிறையில் காத்திருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுக்களை பிரணாப் முகர்ஜி நிராகரித்தார்.
இதனையடுத்து, அவர்களை தூக்கிலிடுவதை நிறுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டடது. இம்மனுவை விசாரித்த நீதிபதி 6 வார காலம் வரை அவர்களின் தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடாது என தடைவிதித்தார்.
இந்நிலையில், இவர்களின் மரண தண்டனையை 1999ம் ஆண்டு உறுதி செய்த சுப்ரீம் கோர்ட் அமர்வுக்கு தலைமை தாங்கிய முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் கேரள மாநிலம் கோட்டயத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், ‘’முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் 22 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளனர். அவர்களை இப்போது தூக்கிலிடுவது ஒரே குற்றத்துக்காக இரண்டு முறை தண்டனை விதிப்பது போல் ஆகிவிடும். இது நமது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
ஆயுள் தண்டனை காலத்திற்கும் மேலாக அவர்கள் சிறையில் தண்டனை அனுபவித்து விட்டதால் இது தொடர்பாக ஜனாதிபதி மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்று கூறினார்.

ad

ad