சனல்4 தொலைக்காட்சியால் வெளியடப்பட்டுள்ள பாலச்சந்திரனின் படுகொலை தொடர்பான புகைப்பட ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அவை உண்மைக்கு புறம்பானவை என சிறிலங்கா அரசுதரப்பில் தெரிவித்ததை மறுத்துள்ளார் கெலன் மெக்ரே.

சனல்4 தொலைக்காட்சியின் ஆவணப்பட இயக்குனரான கெலன் மெக்ரே புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு வழங்கிய நர்கானலில் இதனை உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டதாக முன்னர் வெளியான புகைப்படமும் தற்போது வெளியடப்பட்டுள்ள புகைப்படங்களும் ஒரே புகைப்பட கருவியால் படம்பிடிக்கப்பட்டுள்ளதாக உலகப்பிரபல்யம் பெற்ற தடயவியாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டடுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது திட்டமிட்ட படுகொலை எனத் தெரிவத்த கெலன் மெக்ரே இதனை பொய்யானதென சிறிலங்கா அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு முயற்சிப்பது சிறிலங்கா அரசின் முட்டாள்த்தனத்தை வெளிப்படுத்துவதாக உள்ளதாக கெலன் மெக்ரே மேலும் தெரிவித்துள்ளார்.
 


http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-balachchandran%20(2).jpg