புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2013


65ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்
இலங்கையின் 65ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.


இலங்கை சுதந்திரம் அடைந்து 65ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இன்று நாடெங்கிலும் நடைபெறுகின்றது.

அதன்படி யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

இதன் போது யாழ். வேம்படி மகளீர் கல்லூரி மாணவர்களினால் தமிழ் மொழியில் தேசியகீதம் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது மாவட்ட செயலகத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

எனினும் 65 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இம்முறை திருகோணமலையில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்று வருகின்றது. 

 












வவுனியா மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன. இதன் போது வவுனியா மாவட்ட அரச அதிபர் பந்துல ஹரிச்சந்திர தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்.
அத்துடன் வவுனியா  பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் சிவபாதசுந்தரம் தலைமையில் மரங்கள் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










ad

ad