புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 பிப்., 2013

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியை முன்னிட்டு நடத்தப்பட்ட மரதன் ஓட்டப்போட்டியில் விழிப்புலனற்ற மாணவன் ஒருவன் 8 கிலோ மீற்றர் தூரம் ஓடிச் சாதனை படைத்துள்ளார்.
இந்தப் போட்டியில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் உயர்தரம் கற்றுவரும் விஜயகுமார் விஜயலாதன் என்ற மாணவரே இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.


நேற்று வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு சுன்னாகம் மருதனார் மடத்திலிருந்து தெல்லிப்பழை வரையான 8 கிலோ மீற்றர் தூரத்தை இவர் எந்தவித தடையுமின்றி தனது கண்களை கறுப்பு துணியால் கட்டியவாறு ஓடி முடித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு வன்னியில் நடைபெற்ற யுத்தத்தினால் தனது பார்வையை இழந்த இந்த மாணவர் சுன்னாகம் வாழ்வகத்தில் கல்விபயின்று வருகிறார்.

இவர் இந்தப் போட்டியில் பங்குபற்றி ஏனைய மாணவர்களுக்கு தான் சளைத்தவர் இல்லை என்பதை  நிரூபித்துள்ளார்.

ad

ad