புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 பிப்., 2013


கூட்டமைப்பில் முஸ்லிம் பிரிவு உருவாக்க வேண்டும்; முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் கோரிக்கை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முஸ்லிம் பிரிவு உருவாக்கப்பட்ட வேண்டும் என முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசரான சி.வே விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.


கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த இரண்டு சிறுபான்மை இனங்களும் இணைந்து செயற்படுவதன் மூலமே இனப்பிரச்சினை தீர்வுக்கு ஒரே வழியாகும். கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலின்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைவிட்டது.

நாட்டின் பிரஜை என்ற வகையில் இதற்காக கவலைப்பட்டேன்.முஸ்லிம் கட்சிகளை தொடர்ந்து நம்பியிருக்காது தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் முஸ்லிம் பிரிவு உருவாக்கப்பட்ட வேண்டும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

அதற்கான கொள்கை திட்டங்களை வகுத்து செயற்படுத்த வேண்டும். இதன் மூலம் பெறவேண்டியவற்றை இலகுவாக பெறமுடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனும் பெயரின் மூலம் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை இந்த கட்சியில் ஒன்றிணைக்க முடியும். தமிழ்த் தேசியமும் முஸ்லிம் தேசியமும் ஒன்றிணைந்து செயற்பட நான் ஆவன  செய்கின்றேன்.

முஸ்லிம்களில் பல்துறை சார்ந்தவர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் அஷ்ரப் எவ்வாறு அன்று எப்படி நுழைத்துக்கொண்டாரோ அப்படி தமிழ்த் தேசிய கூட்டமைப்பினுள் முஸ்லிம்களையும் உள்வாங்க வேண்டும்.

முஸ்லிம்களின் அபிலாஷைகளை தமிழ் தலைவர்கள் உள்வாங்க வேண்டும். அதற்கு ஏற்ப செயற்பட வேண்டும். ஒரே தமிழ், முஸ்லிம் தலைமையின் கீழ் ஒன்றுபட வேண்டும்.

தமிழ் பேசும் மக்களின் உரிமை போராட்டங்களை வலுவாக முன்னெடுக்க வேண்டும். தமிழ் பேசும் மக்கள் போட்டி அரசியல் நடத்துவதற்கான காலம் இதுவல்ல.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகளும் இதை கவனத்திற்கொள்ள வேண்டும். சோரம் போகும் தமிழ் தலைமையினை உண்மையுள்ள முஸ்லிம்கள் ஒருபோதும் வரவேற்கமாட்டார்கள்.ஆனால் நேர்மையான தமிழ் தலைமைத்துவத்தை உண்மையுள்ள முஸ்லிம்கள் எப்போதும் வரவேற்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்

ad

ad