புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2013

புலம் பெயர்ந்து உலக நாடுகளில் வாழும் தமிழீழ உறவுகளே!கடந்த காலங்களையும்,இன்றய நிகழ்வுகளையும்,ஈழத்தின் நாளைய நிலை பற்றியும்,இப்போதே,சிந்திக்க வேண்டியவர்கள்,நாங்கள். 
புலம்பெயர் மக்களே!
கடந்த காலங்களில் தமிழீழ மீட்பிற்காக நீங்கள் ஆற்றிய பணிகள் எத்தகைய பலம் வாய்ந்தது. ஒரு பெரும் விடுதலை போராட்டம் புலம்பெயர்ந்து வாழும் உங்களைக் கொண்டு,உங்கள் உதவிகளோடு நகர்த்தப்பட்டது என்றால் அதற்கு மாற்றுக்கருத்து
இல்லை.எங்கள் விடுதலைப்போராட்டத்தை இரண்டு பெரும் சக்திகளால் தலைவர் வழிநடத்திச் சென்றார்
(1)ஒன்று தாயகத்தில் களத்தில் நின்ற போராளிகள்.
(2)புலத்தில் வாழும் நீங்கள்.
போராளிகளுக்கும் போராட்டத்திற்கும் தேவையானவற்றை பூர்த்தி செய்த நீங்கள்,பொது மக்களையும் கைவிடவில்லை.மேலாக எங்கள் விடுதலை போருக்கு புலங்களிலும் அரசியல் ரீதியாக போராடி பலம் சேர்த்தீர்கள்.இதனை யாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.
ஆனால்,,,
இன்று 2009க்கு பின்பு புலங்களில் பிரிவுகள்,தமிழர் இரண்டு பட்டு கிடக்கிறோம்.
எமது ஆயுதப் போராட்டத்த அடக்க நினைத்து அடக்கிய உலக நாடுகளில் சில எமக்கான தீர்வை பெற்றுத்தரும் வேளையில்
இப்படி பிரிந்து கிடப்பது சரியா?சம்மந்தப்பட்டவர்களை மக்களாகிய நீங்கள் தானே கேட்க வேண்டும்.யாரும் எதிர் பாராதவாறு ஒரு விடயம் நிகழ்ந்துள்ளது.அதாவது ஈழத்தில் போராடியவரும்,புலங்களில் போராடியவரும் ஒன்றாக நிற்கும் வேளையில்,அபார சக்கியாக எடுத்துக்கொண்டு ஒன்றாய் உலக நாடுகளிடம் எமது விடுதலையை கேட்கவேண்டிய நேரத்தில்,இந்தப்பிரிவுகள் வேண்டுமா?எமக்கு இடையில் உள்ள கருத்து முரண்பாடுகளை
வளர்க்கவோ விவாதிக்கவோ இது நேரமல்ல.எதிரியானவனும் தமிழீழ தனிநாட்டை விரும்பாதவனும் செய்யும் சதி என்பது நன்கு தெரிந்து இருந்தும்,அதனை உடைத்து வெளியில் வராமல் என்ன செய்யப்போகின்றீர்கள்? மக்களே உங்கள் கைகளில் முடிவு உள்ளது.சம்மந்தப்பட்டவர்களோடு பேசுங்கள் இணைந்து செயல்ப்பட்டலே ஈழம்.இல்லையேல் மாவீரர்களின் கனவு கனவாகிப்போகும்.இன்றும் ஈழத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள் ஈழம் மலரும் என்று.அதை வீணாக்கி ஸ்ரீ லங்கா அரசு அழித்து மிஞ்சிய மக்களை நீங்கள் அழிக்கப் அழிக்கப் போகின்றீர்களா?
மக்களாகிய நீங்களே நீதிபதிகளாக கருதுகின்றேன். தயவு செய்து சிந்தியுங்கள் வேகமாய் செயல்ப்படுங்கள்.இது மக்களுக்கான போராட்டம்,முழு உரிமையும் உங்களுக்கு உண்டு.சம்மந்தப்பட்டவர்களும் சிந்தியுங்கள்..உயிர் தியாகங்களால் வளர்க்கப்பட்ட
போராட்டம்.உங்கள் சுயநலங்களுக்காகவும் எதிரியிடம் விலை போயும் அழித்து விடாதீர்கள்......
(,,யாழ் வேந்தன்,,)

ad

ad