புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2013


ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு இந்தி மத்திய அரசே காரணம்: பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்
இலங்கையில் உள்ள தமிழர்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். மத்திய அரசின் தவறான செயல்பாட்டால் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு, இலங்கை தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். லட்சக்கணக்கான மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ad

ad