புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2013



திமுகவின் அடுத்த  தலைவர் குறித்து பேசிய குஷ்பு மீது கடும் தாக்குதல்
வார இதழ் ஒன்றுக்கு நடிகை குஷ்பு அளித்துள்ள பேட்டியில் திமுகவின் அடுத்த தலைவர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.


அவர்,  அடுத்த தலைவர் தளபதியாகத்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.  அது கட்சியில் யாராகவும் இருக்கலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.
 இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தி.மு.க.வினர் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று பகல் 12 மணிக்கு குஷ்பு வீட்டில் கல் வீசப்பட்டது.

சென்னை பட்டினப்பாக்கத்தில் அவரது வீடு உள்ளது. வீட்டின் எதிரில் 10 ஆண்களும், 10 பெண்களும் திரண்டார்கள். அவர்கள் குஷ்புவுக்கு எதிராக கோஷமிட்டனர். திடீரென்று வீட்டின் மீது சரமாரியாக கல் வீசி விட்டு ஓடி விட்டனர்.

இந்த தாக்குதலில் குஷ்பு வீட்டுக்குள் நிறுத்தி வைத்திருந்த கார் கண்ணாடிகள் உடைந்தன. மதில் சுவரில் இருந்த விளக்குகளின் கண்ணாடிகளும் உடைந்தன. கல் வீசியவர்கள் யார் என்று தெரியவில்லை.
திருமண நிகழ்ச்சிக்காக திருச்சி சென்றிருந்தார் குஷ்பு. திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த குஷ்பு , வராண்டாவில் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு புகுந்த தி.மு.க.,வினர் குஷ்பு மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். 
இன்று மாலை தி.மு.க., கட்சிக்கூட்டம் திருச்சியில் நடக்கவுள்ளது. அதில் பங்கேற்க குஷ்பு வரும்பட்சத்தில் மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ad

ad