புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2013


ஐரோப்பிய வாழ் இலங்கையர்கள் ஜெனீவாவில் போராட்டம்

எதிர்வரும் 15ம் திகதி ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பு காரியாலயத்திற்கு எதிரில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.ஐரோப்பிய வாழ் இலங்கையர்கள் ஜெனீவாவில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதனை எதிர்த்து இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
கெபதிகொல்லாவ, துடுவௌ பிரதேச மக்கள் புலிகளினால் கொல்லப்பட்டதாகவும், அரந்தாலாவையில் பௌத்த பிக்குகள் கொல்லப்பட்டதாகவும் ஆர்ப்பாட்டக்காரகள் கோஷமெழுப்பத் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

ad

ad