புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2013


போத்தலில் அடைக்கப்பட்டிருந்த பூதம் வெளி வந்திருக்கிறது : அமைச்சர் ரவூப் ஹக்கீம்

முஸ்லிம்களின் சமய, சமூக, கலாசார தனித்துவங்களை தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்தி நோக்கும் பார்வை இப்பொழுது மேலோங்கியுள்ளதாக குறிப்பிட்ட நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே தமது தனித்துவத்தைப் பேணும் ஆடை அணிகளை முஸ்லிம்கள் அணிந்து வந்துள்ளனர் என்றும் அவ்வாறு அவர்கள் தங்களது தனித்துவத்தை வெளிக்காட்டுவது புதியதல்லவென்றும் தெரிவித்தார்.

நிந்தவ+ரில் நடைபெற்ற ஒன்றுகூடலொன்றின் போதே கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
முஸ்லிம்களுக்கு எதிரான பேரினத் தீவிரவாதிகளின் வெறுப்பு நடவடிக்கைகளுக்கு சமூக, அரசியல், வர்த்தகப் பரிமாணம் என மூன்று பரிமாணங்கள் உள்ளன. காலம் காலமாக இவற்றின் மீது பேரினத் தீவிரவாதிகளின் கவனம் திரும்பியிருந்தது.
அவர்கள் அவ்வப்போது முஸ்லிம்களை சீண்டிப் பார்த்து நாங்கள் எந்த அளவுக்கு சகித்துக்கொள்கிறோம் அல்லது எங்களது பதில் நடவடிக்கை எவ்வாறு அமையப்போகிறது என்பதை பரீட்சித்து வந்துள்ளனர்.
போத்தலில் அடைக்கப்பட்டிருந்த பூதம் இப்பொழுது வெளிக்கிளம்பியுள்ளது. வெளியில் வந்த பூதத்தை மீண்டும் போத்தலுக்குள் அனுப்புவது இலேசான காரியமல்ல. ஆப்பிழுத்த குரங்கின் நிலை ஏற்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் மத்தியில் வேறுபட்ட சிந்தனைக் கோட்பாடுகள் காணப்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
பலவீனமான மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பலமான அரசாங்கத்திற்கு உண்டென நான் முன்னரும் வலியுறுத்தியிருக்கிறேன்.
முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரித்திருப்பதாக அச்சமடைகின்றனர். அண்மையில் நான் பிறப்பு, இறப்பு பற்றிய தலைசிறந்த புள்ளிவிபர ஆய்வாளர் பேராசிரியர் ஜயந்த திஸாநாயக்கவை சந்திக்க நேர்ந்த பொழுது அவர், முஸ்லிம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதைப் பற்றிப் பிரஸ்தாபித்தார். பொதுவாக சனத்தொகை விகிதாசாரத்தில் ஏற்ற இறக்கம் காணப்படுவது இயல்பானது என்றும், அது மாறும் தன்மை வாய்ந்தது என்றும் அதற்காக சிங்கள மக்கள் வீணாக அஞ்சவோ, அலட்டிக்கொள்ளவோ தேவையில்லை என்று என்னிடம் கூறினார்.
இலங்கைக்கு எதிராக ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து ஏழு முஸ்லிம் நாடுகள் வாக்களித்திருக்கின்றன. அத்துடன், 52 நாடுகள் அங்கம் வகிக்கும் முஸ்லிம் நாடுகளின் அமைப்பு ஜனாதிபதிக்கு இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் ஒரு முக்கியமான கடிதத்தையும் அனுப்பி வைத்துள்ளன என அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்
.

ad

ad