சட்டக்கல்லூரி மாணவர்கள் மறியலில் கைகலப்பு : திருச்சி பரபரப்பு ( படங்கள் )
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கோரி திருச்சி சட்டக்கல்லூரி மாண வர்கள் டிவி.எஸ். டோல்கேட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
நான்கு முனை சந்திப்பையும் அடைத்து நின்று மறியல் செய்தனர். 3 மணி நேரத்திற்கும் மேலாம போக்குவரத்து பாதிக்கப்பட்டது.thx nakkeran
இந்த மறியலின் போது, இன்ஸ்பெக்டர் செல்லமுத்து அந்த வழியாக காரில் சென்றார். அவரது காரை மாண வர்கள் தடுத்து நிறுத்தினர். காரில் இருந்து கீழே இறங்கிய செல்லமுத்து, போலீஸ்காரன் காரையே மடக்குறியா என்று கேட்டபடி, ராஜேஷ் என்கிற மாணவனை அடித்துவிட்டார்.
இதனால் மாணவர்கள் மேலும் ஆத்திரமாக மறியலை தொடர்கின்றனர். செல்லமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷம் எழுப்பி வருகின்றனர். இதையடுத்து போலீஸ் தரப்பு சட்டக்கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திருச்சியில் முக்கியபகுதியில் மறியல் என்பதால் போக்குவரத்து கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இதனால் மாணவர்கள் மேலும் ஆத்திரமாக மறியலை தொடர்கின்றனர். செல்லமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷம் எழுப்பி வருகின்றனர். இதையடுத்து போலீஸ் தரப்பு சட்டக்கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திருச்சியில் முக்கியபகுதியில் மறியல் என்பதால் போக்குவரத்து கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.