புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2013


இதுதான் விபச்சாரம் நடந்த யாழ் வீடு 
வன்னியினில் யுத்த பாதிப்புகுள்ளான சில பெண்களை வைத்து விபச்சார விடுதி நடத்தப்பட்டு வந்துள்ளது. அத்துடன் யாழ்ப்பாணத்தினில் நடத்தப்பட்டுவந்ததாக கூறப்படும் மற்றொரு பாலியல் விடுதியும் இன்று முற்றுகைக்கு உள்ளாகியுள்ளது. நல்லூர் கோவில் வீதியில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி அலுவலகத்தின் அருகாக இயங்கி வந்த விடுதியொன்றே பாலியல் முறைகேடுகளுக்கும் தளம் அமைத்து கொடுத்திருந்ததாக கூறப்படுகின்றது. எனினும் இவ்விடுதியும் குறித்த கட்சி பிரமுகர்
ஒருவருக்கு சொந்தமானதென குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வன்னியினில் யுத்த பாதிப்புகளிற்குள்ளான சில பெண்களை வைத்து இவ்விடுதி இயக்கப்பட்டமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பெரும்பாலும் தெற்கிலிருந்து யாழ் செல்லும் விருந்தினர்களை மகிழ்விக்க இவ்விடுதி பயன்பட்டதும் விசாரணைகளினில் கண்டறியப்பட்டுள்ளது.அப்பாவி யுவதிகளை வேலை வாய்ப்பிற்கான ஆசை வார்த்தை காட்டி அழைத்து சென்று இவ்வாறு தொழிலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக வன்னியின் வலைஞர் மடம் பகுதியனை சேர்ந்த இளம் தாயொருவர் தனது குடுமப வறுமை காரணமாகவே இத்தொழிலில் ஈடுபட்டதாகதாக அங்கு பிரசன்னமாகியிருந்த பத்திரிகையாளர்களிடம் கெஞ்சி கேட்டுக்கொண்டார்.கணவர் இறுதி யுத்தத்தின் போது காணாமல் போய்விட்டதாகவும் சிறு வயதுடைய மூத்த மகன் ஆச்சிரமமொன்றினில் தங்கியிருப்பதாகவும் மற்றைய சிறுமகனுக்காக அத்தொழிலுக்கு வந்ததாகவும் அவர் கண்ணீருடன் தெரிவித்தார். கைதானவரில் மாணவி ஒருவரும் மாணவனும் அடங்குகின்றனர் என அறியப்பட்டுள்ளது.

ஏற்கனவே யாழ்நகரப்பகுதியினில் இதே பாணியிலான விடுதியொன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad