சென்னை விமான நிலையத்தில் மதிமுக கறுப்புக்கொடி முற்றுகை போராட்டம் ! [படங்கள்]
தமிழ் ஈழ மக்களையும், தமிழக மீனவர்களையும் கொன்று குவிக்கின்ற சிங்கள இராணுவத்திற்கு ஆயுதமும், இந்தியாவில் பயிற்சியும் கொடுப்பேன் என்று சொன்ன, இந்திய இராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி தமிழக வருகையைக் கண்டித்து, மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கறுப்புக்கொடி முற்றுகைப் போராட்டம் சென்னை விமான நிலையத்தில் நடைபெற்றது.
இதில் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்டச் செயலாளர்கள் காஞ்சி, பாலவாக்கம் சோமு, தென்சென்னை வேளச்சேரி பி.மணிமாறன், வடசென்னை சு.ஜீவன், தேர்தல்பணிச் செயலாளர் ந.மனோகரன், மகளிர் அணிச் செயலாளர் குமரி விஜயகுமார் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.