டென்மார்க், ஜேர்மனி மக்களோடு கலந்துரையாட சுவிஸிலிருந்து சீமான் பயணம்
இன்று மாலை டென்மார்க் இல் இடம்பெற இருக்கும் எழுச்சி மாலை நிகழ்வில், கலந்து கொள்வதற்காக செந்தமிழன் சீமான் அவர்கள் டென்மார்க் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.
அவரை டென்மார்க் வாழ் தமிழ்மக்கள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றுள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து சீமான் அவர்கள் ஜேர்மனிக்கு புறப்படவுள்ளார். நாளை மறுதினம் ஜேர்மனி மக்களை சந்திப்பார் எனவும் ஜேர்மனி தமிழ் இளையோர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.