புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2013


டென்மார்க், ஜேர்மனி மக்களோடு கலந்துரையாட சுவிஸிலிருந்து சீமான் பயணம்
நேற்று மாலை ஜநா முன்றலில் பல தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு இளையோர் அமைப்பு சுவிஸ் கிளையின் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ் சீமான் இன்று டென்மார்க் நாட்டுக்கு பயணித்துள்ளார்.
இன்று மாலை டென்மார்க் இல் இடம்பெற இருக்கும் எழுச்சி மாலை நிகழ்வில், கலந்து கொள்வதற்காக செந்தமிழன் சீமான் அவர்கள் டென்மார்க் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.
அவரை டென்மார்க் வாழ் தமிழ்மக்கள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றுள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து சீமான் அவர்கள் ஜேர்மனிக்கு புறப்படவுள்ளார்.  நாளை மறுதினம் ஜேர்மனி மக்களை சந்திப்பார் எனவும் ஜேர்மனி தமிழ் இளையோர் அமைப்பினர்  தெரிவித்துள்ளனர்.

ad

ad