புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2013


இலங்கையில் மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை தேவை! ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை
இலங்கையில் மனித உரிமைகள் மீறல் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

இலங்கையில் கைதான விடுதலைப்புலிகளை விசாரிக்க சிறப்பு இராணுவ நீதிமன்றம் அமைக்க வேண்டும்.
2006-ல் அதிபர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும்.

நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்க்க இலங்கை அரசு சர்வதேச உதவியை நாடலாம்.
மனித உரிமைகள் மீறல் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்.

மேலும் இலங்கையில் தமிழர்களை மறு குடியமர்த்தும் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை.
சிறுபான்மையினருக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட வேண்டும்.
சிறுபான்மையினர் பகுதிகளில் உள்ள இராணுவத்தை வாபஸ் பெறவேணடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ad

ad