புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மார்., 2013

தமிழகத்திலுள்ள பல பாலச்சந்திரன்களை மஹிந்தவால் என்ன செய்ய முடியும்; வைகோ ஆவேசம் மஹிந்த ராஜபக்சவால் ஒரு பாலச்சந்திரனை மட்டுமே கொல்ல முடிந்தது. ஆனால் தமிழகத்தில் பல பாலச்சந்திரன்கள் உள்ளனர். அவர்களை ராஜபக்சவால் என்ன செய்ய முடியும் என ஆவேசமாக
கேள்வியெழுப்பியுள்ளார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலர் வை.கோ.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னை மறைமலைநகரில் கண்டனப் பொதுக் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இதில் பாடசாலை மாணவர்கள் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

அங்கு வந்திருந்த மாணவர்களுக்கு வை.கோ பாலசந்திரனின் உருவம் பொறித்த முகமூடியை வழங்கினார். அதனைப் பெற்ற அனைத்து மாணவர்களும் அணிந்து கொண்டனர். அப்போது அந்த மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அவர் அங்கு உரையாற்றுகையில்,
இலங்கையில் இறுதிக்கட்ட போரில் பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரனை கைது செய்த இலங்கை இராணுவத்தினர், பாலசந்திரனின் கண் எதிரேயே பாதுகாப்புக்கு இருந்த 5 விடுதலைப்புலிகளை சுட்டுக்கொன்றனர்.
பின்னர் பாலசந்திரனுக்கு சாப்பிடுவதற்கு பிஸ்கெட் தந்தனர். அதனை பால் வடியும் சிறுவன் பாலசந்திரன் சாப்பிட்டு கொண்டு இருக்கும்போது போர் மரபை மீறி, இளம் சிறுவனை துப்பாக்கியால் ஈவு இரக்கமற்ற முறையில் சுட்டுக்கொன்றனர்.

இதில் சிறுவனின் மார்பில் 5 குண்டுகள் பாய்ந்து இருந்தன. இலங்கை கொடூரர் ராஜபக்சே, ஒரு பாலசந்திரனை மட்டுமே சுட்டுக்கொல்ல முடிந்தது. ஆனால் தமிழகத்தில் ஏராளமான பாலசந்திரன் உள்ளனர். இவர்களை மஹிந்த என்ன செய்ய முடியும்? பாலசந்திரன் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகளை சனல்- 4 வெட்ட வெளிச்சமாக காண்பித்த பிறகு இலங்கையின் கொடிய போர்க்குற்றம் உலக நாடுகளுக்கு வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.

இங்கு பாலசந்திரன் உருவம் பொறித்த முகமூடி அணிந்து வந்த அனைத்து மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். என்றார்.

இதன் பின்னர் வைகோ, மாணவர்கள் மத்தியில் அமர்ந்து கொண்டார். அப்போது பாலசந்திரன் முகமூடி அணிந்த மாணவர்கள், இலங்கை அரசையும் அதிபர் மஹிந்த ராஜபக்சவையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது மேடை அருகே இருந்த அனைவரும் ஒன்று சேர்ந்து கோஷங்கள் எழுப்பி தங்களது எதிர்ப்பையும் வெளியிட்டனர்.
-  http://onlineuthayan.com/News_More.php?id=494571867401722248#sthash.NS9wQhk2.dpuf

ad

ad