புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2013



          "ஈழத்தில் நடத்திய தமிழினப் படுகொலைகளுக்கு சாட்சியங்கள் இருக்காது' என்கிற இறுமாப்பில் இருந் தனர் ராஜபக்சே சகோதரர் கள். ஆனால் சாட்சியங்கள் காட்சிகளாக நிறைய வந்துவிட்டன, வந்துகொண்டுமிருக்கின்றன. இறுதிக்கட்ட போரின்போதும் nakeeranபோருக்கு பிறகும் முள்ளிவாய்க்கால் பகுதியில் ராஜபக்சே ராணுவம் நடத்திய இனப் படுகொலைகளை இதயம் உள்ள எவராலும் கண்கொண்டு பார்த்திட முடியாது. அத்தனைக் கொடூரமானவை. போருக்குப் பிறகு உயிருடன் சரணடைந்த போராளிகள், பொது மக்கள், முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள், போரில் படுகாயமடைந்தவர்கள் என பலதரப் பட்டவர்களையும் படுகொலை செய்தது கொடுங்கோலன் ராஜபக்சேவின் ராணுவம்.

தங்களிடம் சரணடைந்தவர்களின் ஆடைகளைக் களைந்து அவர்கள் கண்கள் கட்டப்பட்டும் கைகள், முதுகு பக்கம் வளைத்து கட்டப்பட்டும் கொடூரமாக சுடப்பட்ட காட்சிகள் நெஞ்சை உறைய வைப்பவை. இது குறித்து பல செய்திகளை கண்ணீரோடு பதிவு செய் திருக்கிறோம். அந்த செய்திகளில், சரணடைந்த சிறுவர், சிறுமிகளையும் படுகொலை செய்து ரசித்தது சிங்கள ராணுவம் என்று சுட்டிக் காட்டினோம். பிரபாகரனின் மகன் 13 வயதே ஆன பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகளை நாம் பதிவு செய்த போதும், "பாலச்சந்திரனைப் போல இன்னும் பல சிறுவர்களை ராணுவம் கொன்றழித் திருக்கிறது. இதற்கான ஆதாரங்கள் வெளிவரவிருக்கின்றன' என்று குறிப் பிட்டிருக்கிறோம். இதோ அதற்கான புதிய ஆதாரங்கள் வெளியாகி மீண்டும் ஒருமுறை உலகை உலுக்கி யிருக்கிறது. 


லண்டனிலுள்ள உலகத் தமிழர் பேரவை, ராஜபக்சே ராணுவத்தின் போர்க்குற்றங்களுக்கான புதிய ஆதாரம் ஒன்றை தற்போது வெளியிட்டிருக்கிறது. அதில் 7 பேர் இருக்கிறார்கள். அவர் களில் 9 அல்லது 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன். ஒருவருக்கு ஒரு கை இல்லை. அனைவரது ஆடைகளும் களையப்பட்டு அவர்களது கைகள் பின்புறமாக வளைத்து கட்டப் பட்டுள்ளன. அனைவரின் கண்களிலும் அடுத்த சில நிமிடங்களில் நாம் கொல்லப்படவிருக்கிறோம் என்கிற பய உணர்ச்சி பரவியிருக்கிறது. அதேபோல, அவர்கள் அனைவரும் கொடூரமாக சுடப்பட்டு இறந்து கிடக்கிறார்கள். அதில் 10 வயதே நிரம்பிய அந்த சிறுவனின் கபாலம் துப்பாக்கி குண்டு களால் சிதறடிக்கப்பட்டு இறந்து கிடக்கிறான்.

""குழந்தைகளை கொல்வது கொடூ ரத்தின் உச்சம். மனிதர்களால் இதை செய்ய முடியாது. மனிதத் தன்மை யற்றவர்களால் மட்டுமே இதைச் செய்ய முடியும். "ராணுவ சட்ட நெறிகளுக்கு முரணாகவே இலங்கை ராணுவம் நடந்துகொண்டிருக்கின்றன' என்பதற்கு இதெல்  லாம் ஆதார சாட்சிகள். சிறுவர்களை கொல்வது... அதுவும் சரணடைந்த சிறுவர்களை கொல்வது போர்க் குற்றங்களை காட்டிலும் கொடூரமானது.

இலங்கை ராணுவத்தினரின் போர்க் குற்றங்களுக்கான சாட்சிகள் காட்சிகளாக வந்து கொண்டிருப்பதை சர்வதேச நாடுகள் சீரியஸாக கவனம் செலுத்த வேண்டும்'' என்கிறார் தமிழக தடய அறிவியல் துறையின் முன்னாள் இயக்குநர் சந்திரசேகரன்.

பாலச்சந்திரனின் படுகொலை உலகை உலுக்கியது போல தற்போதைய இந்த சிறுவனின் படுகொலையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. உலகத் தமிழர் பேரவையின் தலைவர் சுரேந்திரன்,’""எங்களுக்கு கிடைத்துள்ள இந்த ஆதாரங்களை ஐ.நா. பாது காப்பு கவுன்சிலில் தாக்கல் செய்யவிருக்கிறோம்'' என்கிறார். உலகத்தை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ள இந்த புதிய ஆதாரப் படங்களில் இருப்பவர்கள் யார் என்பது இது வரை தெரிய வில்லை. இந்தப் படங்கள் இலங்கையிலுள்ள தமிழர்கள் பலருக்கும் அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறார்கள் புலம்பெயர்ந்த தமிழ் உறவுகள். விரைவில் அந்த சிறுவனும் மற்றவர்களும் யார் என்பது வெளிச்சத்துக்கு வரும். அந்த புலனாய்வில் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் களமிறங்கியிருக்கின்றன.


இந்த புதிய ஆதாரம் கொழும்பிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. கொழும்பு பத்திரிகையாளர்களை தொடர்பு கொண்டு நாம் பேசியபோது, ’""இறுதிக்கட்ட போரில் முழுமையாக ஈடுபட்டிருந்தது 53-வது படைப் பிரிவு ராணுவத்தினர். 

சிங்கள ராணுவ படைப் பிரிவுகளிலேயே மிகவும் கொடூர மனம் படைத்தவர்கள். சிறுவன் பாலச்சந்திரனை கொன்றதும் இவர்கள்தான்.

புதிய புதிய ஆதாரங்கள் வருவதையடுத்து ராஜ பக்சேவுக்கும், கோத்த பாய ராஜபக்சேவுக்கும் பாது காப்பை இன்னும் பலப் படுத்தியுள்ளார்கள்'' என்கின்றனர்.

ad

ad