புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மார்., 2013


இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்: வங்காளதேச வீரர் அஸ்ரப், ரகீம் சதம்
இலங்கை- வங்காளதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலேயில் நடைபெற்று வருகிறது. இலங்கை முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 570 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. திரிமன்னே (155 ரன்), சங்கக்காரா (142), சண்டிமால் (116) ஆகியோர் சதம் அடித்தனர்.
 
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வங்காள தேசம் 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 135 ரன் எடுத்து இருந்தது.
 
இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. வங்காள தேசம் தொடர்ந்து ஆடியது. முகமது அஸ்ரப் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இது அவருக்கு 6-வது சதம் ஆகும். அவரைத்தொடர்ந்து ரகீம் சதம் அடித்தார். வங்காளதேசம் 4 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

ad

ad