யாழ்ப்பாணம், சங்கானை பகுதியில் தூக்கில் தொங்கி குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு தற்கொலை செய்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாரிடம் தகவல் தெரிவித்ததையடுத்து பொலிஸார் குறித்த சடலத்தை இன்று புதன்கிழமை காலை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சங்கானையைச் சேர்ந்த சோ. புவனதாஸ் வயது 48 என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
கடன் சுமை காரணமாக தனது வீடடை நேற்று முன்தினம் விற்பனை செய்துள்ளதாகவும், இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடன் சுமை காரணமாக தனது வீடடை நேற்று முன்தினம் விற்பனை செய்துள்ளதாகவும், இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.