புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மார்., 2013


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மனதையும் கலங்க வைத்து விட்டது பாலச்சந்திரன் படுகொலை!
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை உலகத்தை உலுக்கியது போலவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மனதையும் பாதித்துவிட்டது என டெல்லி அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இலங்கையில் லட்சக்கணக்கான மக்கள் அந்த நாட்டு ராணுவத்தால் ஈவு இரக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர்.
தமிழ்ப் பெண்களை் கற்பழிக்கப்பட்டனர். சுதந்திரமான பன்னாட்டு விசாரணை வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள் ஐ.நா.வுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றது.
இதே போல உலக நாடுகளில் உள்ள தமிழர்கள் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட காணொளி மற்றும் புகைப்படங்கள் வெளியானது.
இதனால் உலகத் தமிழர்களும், மனித உரிமை அமைப்புகளும், அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளும் கொதித்து எழுந்தது. ஆனால் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது சரிதான் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சாமி கருத்து தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக தலைவர்களை டெல்லியில் சந்தித்த அக்கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி, பாலச்சந்திரன் படுகொலை உலகத்தை உலுக்கியது போலவே எனது மனதையும் பாதித்து விட்டது என உருகிப் போய் சொன்னாராம்.
விரைவில் பாலச்சந்திரன் படுகொலை குறித்து ராகுல் காந்தியிடம் இருந்து இரங்கல் தகவல் வெளியாகலாம் என டெல்லி அரசியல் வட்டாரம் கூறுகின்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ad

ad