புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2013


கைதடிச் சிறுவர் இல்லத்தில் இருந்து காணாமல் போன 12 சிறுமிகள் மீட்பு: 7 சிறுமிகளுக்கு வைத்திய பரிசோதனைகாணாமற்போன சிறுமிகளில் நான்கு சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் குறிப்பிடுவதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
யாழ் கைதடிப்பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து 16 சிறுமியர்கள் காணாமல் போயுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை காலை 11 மணி தொடக்கம் காணாமல் போயுள்ளதாக சிறுவர் இல்ல நிர்வாகம் மற்றும் சிறுவர் இல்லத்தில் தங்கியுள்ள பிள்ளைகள் சார்பாக இரண்டு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சாவகச்சேரி பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் பரிசோதகர் இராஜசிங்க தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாக கைதடியில் உள்ள தனியார் சிறுவர் இல்லத்தில் 35 மேற்பட்ட சிறுவர்கள் வாழ்ந்து வருவதாகவும் அண்மைக்காலமாக இவர்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் விரக்கதியடைந்த சிறுமி ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதாக ஏனைய பெண் பிள்ளைகளால் இது தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இது தொடர்பில் சிறுவர் இல்ல நிர்வாகத்திடம் கேட்டபோது அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும் 10 பேர் மட்டுமே காணாமல் போயுள்ளதாகவும் இதில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு உத்தியோகஸ்தரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வடமாகாண சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு உத்தியோகஸ்தரிடம் கேட்டபோது,
இது தொடர்பான தகவல்களை தன்னால் தரமுடியாது என்றும் அவ்வாறு தகவலை தான் வெளியில் சொன்னால் தனது பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்றும் எற்கனவே நான்கு வருடங்களில் 10 மேற்பட்ட இடமாற்றங்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2ம் இணைப்பு
கைதடிச் சிறுவர் இல்லத்தில் இருந்து காணாமல் போன  12 சிறுமிகள் மீட்பு
கைதடிச் சிறுவர் இல்லத்தில் இருந்து காணாமல் போனவர்களில் 12 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தவிற்கிணங்க நல்லூரில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை குறித்த சிறுவர் இல்லத்தில் இருந்து 16 பேர் காணமல் போயுளளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த 12 பேரில் 7 பேர்  மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இரண்டு பேர் தங்கள் சொந்நத இடமான  மாங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது  சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தரினால் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
3ம் இணைப்பு
யாழ். கைதடி சிறுவர் இல்லத்திலிருந்து காணாமற்போன சிறுமிகளில் நால்வர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்- சிறிபவானந்தராஜா
யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்திலிருந்து காணாமற்போன சிறுமிகளில் நான்கு சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் குறிப்பிடுவதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
யாழ். கைதடிப் பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து 16 சிறுமியர்கள் காணாமல் போயுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்த முறைப்பாட்டை அடுத்து நேற்று திங்கட்கிழமை இரவு குறித்த சிறுமிகளில் 8 பேர் யாழ்.சாவகச்சேரி பொலிஸாரினால் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டனர்.
குறித்த சிறுமிகளை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவர்களில் நான்கு சிறுமிகளுக்கு பாலியல் வன்புணர்வு தொடர்பாகவும் அவர்களின் சிறுநீர் மற்றும் இரத்த மாதிரிகள், பெண்குறி சிதைவுகள் தொடர்பில் மருத்துவப் பரிசோதனை தகுந்த மருத்துவ நிபுணரினால் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது மருத்துவ அறிக்கையின் படி குறித்த சிறுமிகள் நான்கு பேர் பாலியல் உறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவ சான்றுகள் குறிப்பிடுவதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சிறிபவானந்தராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் யாழ்.சாவகச்சேரி பொலிஸார் தெரிவிக்கையில், யாழ்.கைதடி சிறுவர் இல்லத்திலிருந்து காணாமல் போன சிறுதிகள் தொடர்பில் தேடுதல் நடாத்தப்பட்டதில் ஒரு சிறுமி கைது செய்யப்பட்டதை அடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஏனைய 7 சிறுமிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுவர் மற்றும் பொண்கள் பொலிஸ் பிரிவில் சிறுமிகள் தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுமிகள் தொடர்பில் யாழ்.சிறுவர் நீதிமன்றிக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக யாழ்.சாவகச்சேரி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுமிகள் எவரும் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை!- பிழையான செய்தியென பதில் பணிப்பாளர் மறுப்பு
கைதடி சிறுவர் இல்லத்திலிருந்து வெளியேறிய நிலையில் மீட்கப்பட்ட சிறுமிகளில் நால்வர் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானதென யாழ்.போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
தன்னுடைய பெயரைக் கூறிப்பிட்டு வெளியிடப்பட்ட அந்த செய்தியானது முற்றிலும் உண்மைக்கு மாறானதென தெரிவித்த அவர், இதுவரையில் எந்த சிறுமியும் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக மருத்துவ அறிக்கைகள் கிடைக்கப் பெறவில்லையென்றும் தெரிவித்துள்ளார்.
கைதடி சிறுவர் இல்லத்திலிருந்து வெளியேறி சிறுமியர்கள் இதுவரை 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் வெவ்வேறு சிறுவர் இல்லங்களுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த சிறுவர் இல்லத்தை நடாத்திவந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ad

ad