புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஏப்., 2013

புனேவுக்கு எதிரான ஆட்டம்: சென்னை அணி 164 ரன்கள் சேர்ப்பு
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 42-வது லீக் போட்டி இன்று இரவு 8 மணிக்கு புனேவில் தொடங்கியது. இதில் புனே வாரியர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி
வருகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பேட்டிங் தேர்வு செய்தார்.

தொடக்க வீரர் ஹசி 5 ரன்னில் ரிச்சார்ட்சன் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து சகாவுடன் ரெய்னோ ஜோடி சேர்ந்தார். சகா 13 ரன்கள் எடுத்த நிலையில் ராகுல் சர்மா பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆகி வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு ரெய்னாவுடன் பத்ரிநாத் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். ரெய்னா சிறப்பாக விளையாடி 42 பந்தில் அரை சதம் அடித்தார். பத்ரிநாத் 34 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அப்போது சென்னை அணி 15.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 103 ரன் எடுத்திருந்தது. 4-வது விக்கெட்டுக்கு ரெய்னாவுடன் டோனி ஜோடி சேர்ந்தார். டோனி புனே வாரியர்ஸ் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். அவர் 16 பந்தில் பவுண்டரி, 3 சிக்சருடன் 45 ரன்கள் எடுத்தார். இதனால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. ரெய்னா 50 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 63 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.

ad

ad