புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2013


மட்டக்களப்பில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 6 பேர் கைது
மட்டக்களப்பில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் பெண்கள் மூவரையும்  ஆண்கள் மூவரையும் கைது செய்துள்ளதாக மட்டு. பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், இன்று இரவு ஹேட்டல்களில் சுற்றிவளைப்புத் தேடல் இடம்பெற்றுள்ளது. இதன்போதே இவர்கள் ஆறு பேரும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட ஆண்களில் இருவர் படைத்தரப்பில் முக்கிய பதவிகளை வகிப்பவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மற்றுமொருவர் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் தமிழ், முஸ்லிம், சிங்களம் ஆகிய இனத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ள்ளனர்.
தமிழ், முஸ்லிம் பெண்கள், பருத்திச்சேனை மற்றும் காத்தான்குடி பிரதேசத்தினைச் சேர்ந்தவர்கள் என்றும் சிங்களப் பெண் கந்தளாயைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ad

ad