புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஏப்., 2013


ராஜிவ் கொலைக் குற்றவாளிகளை முதல்வர் ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியும்!- பழ. நெடுமாறன்
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 3 தமிழரின் தூக்கு தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றம் என்ன மாதிரியான தீர்ப்பளித்தாலும் மூவரையும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தாம் அனுப்பிய கருணை மனுவை தாமதமாக குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார்.
இதனால் தமது தூக்கை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்பது 1993ம் ஆண்டு 9 பேர் பலியான குண்டு வெடிப்பில் சிக்கிய பஞ்சாப்பை சேர்ந்த புல்லரின் கோரிக்கை.
இவரது கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம் கருணை மனுவை தாமதமாக நிராகரிப்பதை ஒரு காரணமாக ஏற்று தூக்கை குறைக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.
இதே புல்லர் வழக்குடன் சேர்த்துதான் ராஜிவ் வழக்கில் 3 தமிழர்களின் மனுவும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போதைய தீர்ப்பின் தாக்கம் அந்த வழக்கின் தீர்ப்பிலும் இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன், தற்போதைய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் தாக்கம் மூன்று தமிழர் வழக்கின் தீர்ப்பிலும் நிச்சயமாக இருக்கும்.
அதில் சந்தேகம் இல்லை. ஆனால் உச்சநீதிமன்றம் என்னமாதிரியான தீர்ப்பு அளித்தாலும் அதிலிருந்து மூவரையும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியும்.
மூன்று தமிழருக்கும் கருணை காட்ட வேண்டும் என்று ஏற்கெனவே தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் என்ன மாதிரியான தீர்ப்பு அளிக்கப்பட்டாலும் கூட தமிழக சட்டசபை தீர்மானத்தின் அடிப்படையில் மூவரையும் முதல்வர் ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

ad

ad