இத்தாலியில் இலங்கைப் பெண் ஒருவர் எரியுண்டு மரணம்!- கணவர் சந்தேகத்தில் கைது செய்யப்படவுள்ளார்!
இத்தாலியின் அதிகாரத்தின் கீழ் உள்ள சிசிலி தீவின் கெட்டேனியாவில் வசித்துவரும் இலங்கை பெண்னின் மரணம் தொடர்பில் அவரது கணவரான இலங்கையர் கைது செய்யப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வார இறுதியில் 42 வயதாக மதுரி வர்ணகுல என்ற இலங்கை பெண் தீயில் எரியுண்டு மரணமானார்.
இந்த சம்பவம் தொடர்பில் அவரது கணவன் சிசிலி காவற்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் சிசிலி காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.