தினத்தந்தி அதிபர்
சிவந்தி ஆதித்தன் காலமானார்
சிவந்தி ஆதித்தன் காலமானார்
தினத்தந்தி அதிபர் சிவந்தி பா.சிவந்தி ஆதித்தன் (76) சென்னையில் இன்று காலமானார். கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிர் பிரிந்தது.
சென்னை பெசண்ட் நகரில் சிவந்தியின் இறுதிச்சடங்கு நாளை பிற்பகல் நடக்கிறது.
1958ம் ஆண்டு முதல் பத்திரிகை துறையில் பணியாற்றியவர் சிவந்தி ஆதித்தன். இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவியும் வகித்தார் சிவந்திஆதித்தன்.