புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2013



          ""மேடம்... நான் காலேஜ்ல படிச்சிட்டிருக்கேன். கடந்த 2006-ஆம் வருஷத்துல என் அம்மா, எங்கப்பா சுந்தர்ராஜன்கிட்டயிருந்து விவாகரத்து வாங்கினதும் சொக்கம்புதூர் செந்தில்ங்கிறவரு கூடதான் கணவன்- மனைவியா வாழ்ந்தாங்க. அவருதான் எங்களை நல்லாப் பார்த்துக்கிட்டாரு. என்னை தந்தை ஸ்தானத்தில் இருந்து படிக்க வச்சாரு. என்னைய மட்டுமில்லை... அவரால எங்கம்மா பெத்த என் தம்பியான அர்ஜுனையும் நல்லாப் பார்த்துக்கிட்டாரு.nakkeeran

இப்போ எங்கப்பா செந்தில் கோவை மாநக ராட்சியில 21-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராயிருக் காரு. மகளா என்னைப் பார்த்துக்கிட்ட செந்தில் அப்பாவோட நடவடிக்கை கடந்த 8 மாசமா சரி யில்லை. ஒருநாளு நைட்டு அம்மா வெளியே போயிருந்த சமயம் எனக்கு சாப்பாடு வாங்கிட்டு வந்து கொடுத்தவரு, நான் சாப்பிட்டதும் என் கையப் புடுச்சு தூக்கிட்டுப்போய் படுக்கையில தள்ளிவிட்டாரு. 

"இங்க பாரு... நான் உனக்காகத்தான் இங்கே வர்றேன். என்னைய நல்லபடியா பார்த்துக்கோ. ஆசையா ஒரு முத்தம் கொடு'ன்னு சொன்னவரு, முரட் டுத்தனமா என்னைக் கட்டிப் புடிச்சாரு. "அப்பா... என்னை விட்ருங்க'ன்னு சொல்லி நான் எவ்வளவோ போராடியும் அவருகிட்டயிருந்து தப்ப முடியலை. மகள்னு கூடப் பார்க்காம என்னைய கெடுத் துட்டாரு...'' என அந்த இளம்பெண் கதறிய படி கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க... அதிர்ந்து போனது இன்ஸ்பெக்டர் மாணிக்கம், எஸ்.ஐ.மருதாம்பாள் தலைமையிலான டீம்.

""அது மட்டுமில்லைங்க மேடம்... என்னை என்னென்னமோ பண்ற மாதிரி செல்போன்ல வீடியோவும் எடுத்து வச்சிருந்தாரு. இதோ அந்த வீடியோவையும் கொண்டு வந்திருக்கேன்...'' என அந்த இளம் பெண் அந்த ஆபாச சி.டி.யை கொடுக்க... மேலும் அதிர்ந்து, விசாரணையைத் துவக்கியது மகளிர் போலீஸ்.

இந்த பாலியல் பலாத்கார புகாரும், ஆபாச சி.டி. விவகாரமும் கோவை அ.தி. மு.க.வினரிடையே சலசலப்பை உண்டாக்க... "இதற்குப் பின்தான் அந்த வீடியோவை வைத்து பல அரசியல் காட்சிகள் நடந்தன' என்கிறார்கள்  கோவை அ.தி.மு.க.வினர்.

மலரவன் அணியில் இருக்கிற செந்தில் மேல இப்படியொரு பாலியல் புகார் வந்ததும், மற்ற அணியைச் சேர்ந்தவர்களுக்கு கொண்டாட்டமோ கொண்டாட்டம்தான். இப்ப வேற பாலியல் சம்பந்தமான புகார்கள் நாட்டையே உலுக்கிப் போடறதால அந்த சி.டி.யை எப்படியாவது கைப்பற்றணும்னு பல்வேறு அணிக்காரங்களும் மிகத் தீவிரமா களம் இறங்கினாங்க. ஆனா வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. மலரவன் அணியோ, இந்த விஷயம் பொதுமக்கள்ட்ட லீக் ஆகிறக் கூடாதுங்கிறதுலயும், செந்தில் மேல எஃப்.ஐ.ஆர். போடக்கூடாதுங்கிறதுலயும், வீடியோ கேசட் யார் கைக்கும் கிடைக்கக் கூடாதுங்கிறதுலயும்  தெளிவா வேலை  செய்ய ஆரம் பிச்சது. "செந்தில் மேல் நட வடிக்கைகள் ஏதும் எடுக்க வேண்டாம்' என காவல் துறை அதிகாரிகளி டம் பேச, துணை சபாநாயகரான பொள்ளாச்சி ஜெயராமனைக் கூட அணுகினாங்க. 

இது லேடிஸ் மேட்டருங்கிறதால பொள்ளாச்சியார் ஒதுங்கிக்கிட்டாரு. மலரவன் அணி எந்த வகையிலெல்லாம் செந்தில் விஷயத்தை வெளியே தெரியாம மூடி மறைக்கணும்னு நெனைச்சதோ, அதை முறியடிச்சது கோவை மாநகராட்சி மேயர் செ.ம.வேலுச்சாமி அணி.


ரொம்ப சீக்கிரமா அந்த சி.டி.யை கைப்பற்றிய செ.ம. அணியினர், செந்தில் அந்த இளம்பெண்ணை வற்புறுத்தி முரட்டுத்தனமாய் படுக்கைக்கு இழுப்பது போலான காட்சிகளும், அந்த இளம் பெண்ணை குடிக்கச் சொல்லி வற்புறுத்து வது போலவும், தொடக்கூடாத இடங்களில் அவன் கைகள் முரட்டுத்தனமாய் ஊர்வது போலவும் உள்ளிட்ட பல காட்சிகள் அடங்கிய அந்த சி.டி.யை உடனே தலைமைக்கு அனுப்பிட்டாங்க.

அதற்குள் யாருடைய ரெக்கமெண்ட்டுகளையும் ஏற்காத கமிஷனர் விஸ்வநாதன், செந்தில் மேல் எஃப்.ஐ.ஆர். பதியச் சொல்லி உத்தரவிட்டதையடுத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாணிக்கம், கவுன்சிலர் செந்திலின் மீது கற்பழித்தல், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தார்.

இதைத் தெரிஞ்சு அதிர்ச்சியான செந்தில் தலைமறைவாக... கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் ஏற்படுத்தி, கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக நடந்துகொண்ட மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளரும், மாநக ராட்சி கவுன்சிலருமான செந்திலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார். 

கட்சியில் யாரும் எவ்விதத் தொடர்பும் அவருடன் வைத்துக்கொள்ளக் கூடாதுன்னும் அறிவிச்சிட்டாங்க.

இதுல மலரவன் டீம் செம அப்செட். இந்தச் சூழல்ல செந்தில் முன்ஜாமீன் கேட்டு கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துல மனு தாக்கல் பண்ணியிருக்காரு.

அந்த மனு விசாரணைக்கு வரவிருக்கிற நிலையில் தலைமறைவாயிருக்கிற செந்திலுக்கு கட்சிக்காரங்க யாராவது  உதவுறாங்களான்னு பார்க்க... ""எங்க கட்சியில இருக்கிற எல்லா அணி களுமே கண்ணுல விளக்கெண்ணெய் ஊத்திக்கிட்டு மண்ணெண்ணெய் விளக்கோட ராத்திரி கூட அலையுறாங்க'' என்கிறார்கள் சிரித்தவாறே.

காவல்துறை மகளிர் டீமோ... ""அந்த சி.டி.யைப் பார்த்ததும் எங்களுக்கே தூக்கிவாரிப் போட்டிருச்சு. சமுதாயத்தோட வெளியில கரை வேட்டி கட்டி நல்ல மனிதர்களா காட்டிக்கிறவங்க ஒரு சின்ன அறைக் குள்ள எவ்வளவு சின்னத்தனமா வேலைகள் பண் றாங்கன்னு பாருங்க. இந்த செந்திலுக்கு ஏற்கனவே ஒரு மனைவி வேற இருக்கிறாங்க. தலைமறைவான செந்திலை நிச்சயம் கைது செய்வோம்'' என்கிறார்கள் உறுதியாய்.

இந்த வழக்கிலிருந்து தப்பிக்க சம்பந்தப்பட்ட இளம்பெண் தரப்பிடம் சமரசம் பேச தி.மு.க.வினர் சிலரையும் அணுகியதாம் செந்திலின் தரப்பு. "நாங்களும் எங்க கட்சியிலிருந்து நீக்கப்படணுமா என்ன?' என ஜகா வாங்கிவிட்டிருக்கின்றனர் தி.மு.க.வினர். மொத்தத்தில் இந்தப் பாலியல் வழக்கு பரபரப்பின் உச்சத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறது.

-அ.அருள்குமார்

ad

ad