ஸ்லோவேனியா மாநாட்டில் தமிழ் இன படுகொலை தொடர்பில் விவாதம்.
இனப்படுகொலைக்கெதிரான தமிழர்கள் அமைப்பு அமெரிக்கா – இங்கிலாந்தை தளமாக கொண்டதாகும். அவ்வமைப்பின் இங்கிலாந்தைச் சேர்ந்த ஹென்ரிடா ப்ரிஸ்கோ மேற்கண்ட முக்கியமாக உரையாற்றுகிறார்.பாதுகாப்பதற்கான பொறுப்பு’ என்ற தலைப்பில் சால்வேனியாவில் குப்ஜானா பல்கலைக் கழகத்தில் இனப்படுகொலைக்கெதிரான தமிழர்கள் என்ற அமைப்பின் கருத்தரங்கில் 40 நாடுகளைச் சேர்ந்த 80 உரையாளர்கள் பங்கேற்கின்றனர். இதில் ஐ.நா. அவை இனப்படுகொலையைத் தடுக்கத் தவறியமை குறித்து விவாதிக்கப்படவுள்ளது. மேலும் முடிவற்ற ராணுவ மயம், அரசியல் தீர்வு நிராகரிப்பு, பொறுப்பற்ற தன்மை, கலாசார இனப்படுகொலை, பூகோளவியல் ரீதியான மறுவரயறை முதலியனவும் உரையாடப்படவுள்ளது.