புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மே, 2013


இலங்கையில் குண்டுவெடிப்பு: 6 சிங்கள வீரர்கள் உயிரிழப்பு
இலங்கை முல்லை தீவுப்பகுதியில் 07.05.2013 செவ்வாய்க்கிழமை திடீர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 6 சிங்கள வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தற்செயலாக நடந்த விபத்து என இலங்கை இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


ராணுவ முகாமில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர் ஒருவரின் கைக்குண்டு வெடித்ததினால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும், இதுதிட்டமிட்டு நடத்தப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. 
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள வீரர்களின் தற்கொலைகள் மற்றும் தற்கொலை முயற்சிகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 
இதனிடையே நேற்று முல்லைத்தீவு மாஞ்சோலை பகுதியில் துப்பாக்கி சூடு காயங்களுடன் ஒரு சிங்கள வீரர் சடலமாக கிடந்துள்ளார். இவரது மரணம் குறித்து இதுவரை தெரியவில்லை என்றும், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

ad

ad