மௌரிசியஸ் தமிழ் மக்கள், தமிழீழ மக்களுடன் கைகோர்த்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்
இன்று மே 17 ஆம் திகதி மௌரிசியஸ் நாட்டின் தலைநகர் போர்ட் லூயிஸில் மௌரிசியஸ் தமிழ் கோயில்களின் கூட்டமைப்பு, அங்கு இருக்கும் அனைத்து தமிழ் அமைப்புகளுடன் சேர்ந்து Photos
முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் அங்கு உள்ள அனைத்து ஆலயங்களிலும் செய்தபின் அந்நாட்டு பாராளுமன்றம், மற்றும் இந்திய, அமெரிக்க தூதராலயங்களை நோக்கி பல்லாயிரம் மக்கள் உணர்வு பூர்வமாக தமிழீழ தேசிய கோடியை ஏந்தியவண்ணம் தமிழ் ஈழம் தான் இறுதி முடிவு என்று உணர்த்தும் முகமாக எமது தேசிய நிறமான சிவப்பு மஞ்சள் கோடியில் தமிழ் ஈழம் என்று பொறித்து எல்லோரும் ஏந்தி சென்றனர். அத்துடன் சிறி லங்கா சர்வதேச அமைப்புகளில் இருந்து புறக்கணிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.நாளை மே 18 சர்வதேசம் எங்கும் உள்ள தமிழீழ மக்கள் அவைகள், தமிழ் தேசிய அமைப்புகளுடன் கைகோர்த்து Beau Bassin என்ற இடத்தில் இருந்து Rose Hill Plaza நோக்கி சென்று அங்கு முள்ளிவாய்கால் தமிழின அழிப்பு நினைவாக நினைவு தூபி ஒன்றை திறத்து வைக்க இருக்கின்றனர்.
- செய்தி தமிழீழ மக்கள் பேரவை பிரான்
சு