புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2013


சென்னை மெரீனாவில்
மே 18 நினைவேந்தல் கூட்டம்:
விடுதலைப்புலிகள் கொடிகளை
அகற்ற சொன்ன போலீசார் 




தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக சென்னை மெரீனா கடற்கரையில் 18.05.2013 சனிக்கிழமை மாலை ஈழப்போரில் இறுதி நாட்களில் ஆயிரமாயிரம் பேர் கொன்றுகுவிக்கப்பட்டு ஓர் இனப்படுகொலை நடத்தி முடித்ததாக இந்த உலக நாடுகள் அறிவித்த நாள் மே 18, 2009. தமிழின இனப்படுகொலையைக் கண்டித்தும், ஐ.நா.மன்றம் உடனடியாக ஈழத் தமிழர்கள்  வாழும் பகுதியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் பேரணி நடத்த இருந்தனர். 
அதன்படி மாணவர்கள் சென்னை மெரீனாவில் கூடினர். பேரணி செல்ல தயாராக இருந்தனர். அப்போது போலீசார் அனுமதிக்காததால் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. மேலும் நினைவேந்தல் கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் கொடிகளை பயன்படுத்தியவர்களிடம், போலீசார் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினர். பின்னர் அந்த கொடிகள் அகற்றப்பட்டது. பின்னர் மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர். 
படங்கள்: ஸ்டாலின்

ad

ad