புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மே, 2013

அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு! சென்னையில் பரபரப்பை 
ஏற்படுத்திய பைனான்சியர்!
சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள சப்தமல்லிகா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சினிமா பைனான்சியர் விஜய்கர் என்பவர், இரு கைத்துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு புதன்கிழமை (22.05.2013) காலை 7 மணி முதல் மிரட்டல் விடுத்தார்.
நன்றி நக்கீரன் 


வீட்டு வாடகை தரவில்லை என்று அடுக்கமாடி குடியிருப்பு நிர்வாகிகள் கேட்டபோது, துப்பாக்கியை காட்டி மிரட்டியதுடன், மேல் நோக்கி சுட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை துப்பாக்கியை காட்டி தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டி வந்துள்ளார். மேலும் அவருடன் ஒரு பெண்மணி உள்ளார். அவர் யார் என்று கேட்டதற்கு அவர் தன்னுடைய செயலாளர் என்றும், அவரை ஒன்றும் செய்ய மாட்டேன். தான்தான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார். அவ்வப்போத அவர் ஜன்னல் வழியாக மிரட்டியதுடன், மதுபானமும் அருந்தியுள்ளார்.
தொடர்ந்து அவர் மிரட்டல் விடுத்து வந்ததால், போலீசார் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் விருதுநகர் சென்றுள்ளதால் அவரை விமானம் மூலம் வரவழைக்க ஏற்பாடு செய்தனர் போலீசார். அவர்கள் வந்ததும் விஜய்கருடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக அழைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். 
சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து வந்த நோட்டீசை காட்டி, குடியிருப்பு நிர்வாகிகள் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று சொன்னதால் விஜய்கர் கோபம் அடைந்தார் என்று கூறப்படுகிறது. 
விஜய்கரையும், பொதுமக்களையும் காப்பாற்ற வேண்டும் என்று போலீசார், அதிரடிப்படையினர், தீயணைப்பு துறையினர் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
இந்த சம்பவத்தை காண பொதுமக்கள் கூடியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.




படங்கள்: ஸ்டாலின்

ad

ad