புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2013

முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது மும்பை: 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போராடி வீழ்ந்தது சென்னை(வீடியோ இணைப்பு)

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய இறுதிப்போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டு 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்கள் எடுத்தது.
இதில் அதிகபட்சமாக பொல்லார்டு 60 ஓட்டங்களும், ராயுடு 37 ஓட்டங்களும், தினேஷ் கார்த்திக் 21 ஓட்டங்களும் எடுத்தனர். சென்னை அணி சார்பில் பிராவோ 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து 149 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக டோனி 63 ஓட்டங்களும், முரளி விஜய் 18 ஓட்டங்களும், பிராவோ 15 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். மும்பை அணி சார்பில் ஆட்ட நாயகன் விருதை பொல்லார்டு பெற்றுள்ளார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மும்பை அணி தனது முழு திறமையை வெளிப்படுத்தி முதன்முறையாக  கோப்பை கைப்பற்றி உள்ளது.

ad

ad