புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2013


25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம்: ஜெ., அறிவிப்பு
அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மாவட்ட ஆலோசனை கூட்டங்கள் வருகிற 25-ந்தேதி முதல் ஆகஸ்டு 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பொது மக்களிடம் விளக்குவது, பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைகளை சேர்ந்தவர்களை தயார்படுத்துவது, கழகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்ட பணிகளை முனைப்புடன் மேற்கொள்ள இந்த ஆலோசனை கூட்டங்கள் நடைபெறுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டங்கள், கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயளாளரும், அமைச்சருமான டாக்டர் வைகைச் செல்வன் தலைமையில் நடைபெறும். ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த, மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தங்கள் பகுதியைச் சேர்ந்த பாசறை நிர்வாகிகள் அனைவரும் ஆலோசனைக் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ளும் வகையில் உரிய ஏற்பாடுகள் செய்திட வேண்டும்’’என்று கூறி உள்ளார்.
இதன்படி காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் 25-ந்தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. காஞ்சீபுரம் மத்திய மாவட்டம் 26-ந் தேதி காலை 10 மணிக்கும், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட கூட்டம் அன்று மாலை 4 மணிக்கும் நடக்கிறது. இதே போல் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கூட்டம் 1-ந்தேதி காலை 10 மணிக்கும் தெற்கு மாவட்ட கூட்டம் மாலை 4 மணிக்கும் நடக்கிறது.
வேலூர் மாநகர் மாவட்டத்தில் 2-ந்தேதி காலை 10 மணிக்கும் வேலூர் புறநகர் கிழக்கு மாவட்டத்தில் மாலை 4 மணிக்கும் கூட்டம் நடக்கிறது. இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad