புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மே, 2013


சேப்பாக்கம் மைதானத்தில் சென்னையின் வெற்றிக் கொடி நீடிக்குமா? பஞ்சாப்புடன் நாளை மோதல்

சென்னை: ஐபிஎல் 6வது தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. சென்னை சூப்பர்
கிங்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா அணியை 2 முறையும், பஞ்சாப், பெங்களூர், டெல்லி, ராஜஸ்தான், ஐதராபாத், புனே அணிகளை தலா ஒரு முறையும் வீழ்த்தியுள்ளது. மும்பை, புனேயிடம் தலா ஒரு ஆட்டத்தில் மட்டும் தோற்றுள்ளது. பஞ்சாப் அணியை அதன் சொந்த மண்ணான மொகாலியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தி வெற்றியுடன் திரும்பியது. இதற்கு நாளைய போட்டியில் பதிலடி கொடுக்க பஞ்சாப் அணி தயாராகி வருகிறது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ச்சியாக 6 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாளைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்று பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை

!

ad

ad