புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மே, 2013

யாழ். மாவட்ட காணி சுவீகரிப்பு அலுவலக பொறுப்பதிகாரி இராஜினாமா?
யாழ்.மாவட்டத்தில் பரவலாக இராணுவத்திற்கான காணி சுவீகரிப்பிற்கு உத்தரவிட்ட யாழ். மாவட்ட காணி சுவீகரிப்பு அலுவலகத்தின் பொறுப்பதிகாரி ஆ.சிவசுவாமி தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்தாண்டு அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றிருந்த ஆ.சிவசுவாமி, அண்மையில் காணி சுவீகரிப்பு அலுவலகத்தின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் பரவலாக இராணுவத்திற்கான காணி சுவீகரிப்பதற்கான ஒப்புதலை இவரே வழங்கியிருந்தார்.
இதேவேளை, கடுமையான மன அழுத்தத்தினால் கடந்த மாதமே இவர் பதவி விலகியதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னரே அவர் பதவி விலகல் கடிதத்தை ஒப்படைத்தார்.
மேலும் கடிதம் ஒப்படைக்கப்பட்டதிலிருந்து அவர் கடமைக்குச் செல்லவில்லையெனவும் தெரிவிக்கப்படுவதுடன், இந்த தகவல் குறித்து மாவட்டச் செயலகத்துடன் தொடர்பு கொண்டபோது, அது குறித்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.

ad

ad