புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2013


த.தே.ம முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் உள்ளிட்ட சிலர் கைது!- புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைப்பு
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று மாலை 4.00 மணியளவில் மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தற்சமயம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இறுதிக்கட்ட யுத்தத்தில் இறந்த தமிழ் மக்களை நினைவுகூர்ந்து மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற வேளை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
த.தே.ம முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன்- மன்னார் பிராந்திய ஊடயவியலாளர் ஒருவர் கைது- புலனாய்வுத்துறையினரிடம் ஒப்படைப்பு
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் அரச ஊடகவியலாளர் உற்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 6 பேர் தற்போது விடுதலை செய்துள்ளனர்.
இன்று மாலை 4.00 மணியளவில் மன்னார் பொலிஸாரினால் 6 பெண்கள் உற்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உற்படுத்தப்பட்டு வந்த நிலையில் அவர்களில் 6 பெண்களை மன்னார் பொலிஸார் விடுதலை செய்தனர்.
கஜேந்திரன், விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் அரச ஊடகவியலாளர் ஜோசப் பெர்ணாண்டோ உற்பட 9 பேர் தொடர்ந்தும் விசாரணைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருவருகின்றனர்.
தற்போது குறித்த 9 பேரூம் மன்னார் வைத்தியசாலைக்கு அழைத்துச செல்லப்பட்டு  மருத்துவ பரிசோதனைகளுக்கு உற்படுத்தப்பட்டுள்ளனர்.
இறுதிக்கட்ட யுத்தத்தில் இறந்த தமிழ் மக்களை நினைவுகூர்ந்து மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை மன்னார் பொலிஸார் பலவந்தப்படுத்தி ஏற்றிச்சென்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது குறித்த 9 பேரும் மன்னார் பொலிஸ் நிலையத்தில்  புலனாய்வுத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதே சமயம் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு குறித்த கைதுகள் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட் தலைமையிலான ஊடகவியலாளர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் காவல் கடமையில் இருந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டு பலவந்தமாக பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ad

ad