புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மே, 2013


கனடாவின் மிகப் பெரிய மாகாணமான ஒன்றாரியோ மாகாணத்தில் தமிழ் மக்கள் ஆற்றிவரும் சேவைகள் நான் நன்கு மதிக்கின்றேன் என கனடாவின் ஒன்றாரியோ மாகாண அரசின் முதல்வர் கெத்தலின் வெயின் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்ற கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் வருடாந்த வர்த்தக மேம்பாட்டு விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
இங்கு வாழும் தமிழ் பேசும் வர்த்தகப் பெருமக்கள் பலர் தாங்களும் வளர்ந்து தாங்கள் வாழும் மாகாணத்திற்கு கனடா நாட்டிற்கும் புகழ் தேடித்தந்துள்ளார்கள்.
அவர்களின் வளர்ச்சியானது, நமது மாகாணத்தின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கின்றது என்பதை கூறிக்கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.
அண்மைக் காலங்களில் ஒன்றாரியோ மாகாணத்தில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களும் யுவதிகளும் தங்கள் முயற்சிகளிலும் குறிப்பாக கல்வியிலும் உயர்ந்த சாதனைகளைப் படைத்து வருகின்றார்கள்.
ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றத்திலும் தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் தற்போது பணியாற்றுகின்றார்கள். இவர்களைப்போன்று மேலும் பலர் இங்கு அரசாங்க சேவையிலும் அரசியலிலும் ஈடுபாடு கொண்டு முன்னேற்றங்களைக் காணவேண்டும் என்று விரும்புகின்றேன் என்றார்.

ad

ad