புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மே, 2013


ரணசிங்க பிரேமதாச விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கினார்: சஜித் பிரேமதாச
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் சஜித்
பிரேமதாச தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிளவினை ஏற்படுத்தும் நோக்கில் தமது தந்தை இவ்வாறு ஒரு பகுதியினருக்கு ஆயுதங்களை வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாத்தய்யா பிரிவினருக்கு ஜனாதிபதி பிரேமதாச இந்த ஆயுதங்களை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாக தமது தந்தை மீது குற்றம் சுமத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரனுக்க எதிராக கிளர்ச்சி செய்யத் தேவையான பின்னணியை உருவாக்கும் நோக்கில் மாத்தய்யாவின் தலைமையிலான குழுவினருக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்திய உளவுத் துறையான றோவிற்கு புலிகளின் ரகசியங்களை கசிய விட்டதன் காரணமாக பின்னர், பிரபாகரனினால், மாத்தய்யா கொல்லப்பட்
டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ad

ad